***
நகரும் பேருந்தின்
ஜன்னலோர சீட்டில்
அமர்ந்து வானமிடும்
தூறலை ரசிக்கும்
அந்த விழிகள்
***
காலைப் பனி என்
காது குளிர நான்
விழித்துப் பார்க்கையில்
என் எதிர் வீட்டு வாசலில்
கோலமிடும் உன் பட்டு
விரல்கள்
***
நான் எவ்வளவு முயன்றும்
முகம் காட்ட மறுக்கும்
முழு நிலவே !
என் நினைவில் பதிந்து போன
உன் விழிகளையும் விரல்களையும்
எப்படித் தொலைப்பேன் நான்.
Advertisement